- இந்திய விழாக்கள், பண்டிகைகள்
- நடிகர்கள், நடிகைகள்
- ஆன்மீக தலைவர்கள்
- இசையமைப்பாளர்கள்
- எழுத்தாளர்கள்
- சமூக சீர்திருத்தவாதிகள்
- சமூக சேவகர்கள்
- சுதந்திர போராட்ட வீரர்கள்
- தொழிலதிபர்கள்
- நாட்டிய கலைஞர்கள்
- விஞ்ஞானிகள்
- விளையாட்டு வீரர்கள்
Search on ItsTamil
ஆசிரியர் தினம்
ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 05 நாளை ‘ஆசிரியர் தினமாக’ கொண்டாடுகிறோம். வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும். சிறந்த படைப்பாளிகள் மற்றும் உன்னத மனிதர்களாகத் திகழும் ஆசிரியர்களைப் போற்றும் ஆசிரியர் திருநாளைப் பற்றி விரிவாகக் காண்போம்.
ஆசிரியர் தின வரலாறு
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. கல்வித் தொடர்பாக மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களையோ, கல்வி சம்பந்தப்பட்ட சிறப்பான நிகழ்வுகளையோ நினைவுக்கூரும் வகையில் ஆசிரியர் தினம் வருகிறது.
ஆசிரியர் பணி என்றால் என்ன?
ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை; ஒழுக்கம் பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமானப் பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது; கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள்.
தன்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக, ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயன்பட முடியும் என்பதை தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, ஒரு மாபெரும் தத்துவமேதையாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்திய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை, இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருநாளில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என இந்தியா முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு மரியாதை தரும் வகையில் சிறப்புகள் செய்யப்பட்டு வருகிறது.
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பற்றிய சிறப்பு
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 ஆம் நாள் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற இடத்தில் ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்தார். தத்துவத்தை முதற்பாடமாகக் கொண்டு இளங்கலைத் துறையில் பி. ஏ. பட்டமும், பின்னர் முதுகலைத் துறையில் எம். ஏ. பட்டமும் பெற்றவர். சென்னையில் உள்ள பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடர்ந்த அவர், இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரா, மற்றும் சங்கரா, ராமானுஜர், மாதவர், போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார். அதுமட்டுமல்லாமல், புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி, மற்றும் பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்று, அதன் சிறப்பைப் பற்றி நமது நாட்டில் எடுத்துரைத்தார். மேலை நாடுகளுக்குச் செல்லாமல், நம் நாட்டிலேயே அனைத்து சித்தாந்தங்களையும் படித்து, ஒரு தத்துவமேதையாகத் உலகிற்குத் தன்னை வெளிப்படுத்தினார்.
1918 ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்ட இவர், 1921ல், கல்கத்தா பல்கலைக்கழகத்தில், தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். அதன் பிறகு 1923ல், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் அற்புதப் படைப்பான “இந்திய தத்துவம்” வெளியிடப்பட்டது. இப்புத்தகம், பாரம்பரியத் தத்துவம் இலக்கியத்தின் ஒரு தலைச்சிறந்த படைப்பாகப் போற்றப்பட்டது.
இந்துமதத் தத்துவங்கள் பற்றி விரிவுரைகள் வழங்க, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. பல மேடைகளில், அவரது சொற்பொழிவுகளை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார். மேற்கத்திய சிந்தனையாளர்களின் அனைத்து கூற்றுகளும் பரந்த கலாச்சாரத்தில் இருந்து இறையியல் தாக்கங்கள் சார்புடையதாகவே உள்ளது என்று வாதிட்டார். இந்தியத் தத்துவங்களைத் தரமான கல்வி வாசகங்கள் உதவியுடன் மொழிப்பெயர்த்தால், மேற்கத்திய தரங்களையும் மிஞ்சி விடும் என்றுரைத்தார். இவ்வாறு இந்தியத் தத்துவத்தை, ‘உலக வரைபடத்தில் வைத்த ஒரு மாபெரும் தத்துவஞானி’ என டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களைக் கூறலாம்.
1931 ஆம் ஆண்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 ஆம் ஆண்டு, பெனாரஸ் இந்துமதம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார். 1946ல், அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பின், 1948ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை, பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகுமாறு கேட்டுக்கொண்டது. இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், ராதாகிருஷ்ணன் அவர்களுடைய குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவியது.
ஆசிரியர் தினக் கொண்டாட்டம்
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் ‘ஆசிரியர் தின’ நன்னாளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி எனப் பல்வேறு போட்டிகளை நடத்தி, மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவார்கள். மேலும், சிறந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் வண்ணமாக அவர்களுக்கு விருதுகள் வழங்கி அரசு அவர்களைப் பெருமைப்படுத்தும். மாணவர்களும், அந்நாளில் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி, வாழ்த்துக்கள் தெரிவிப்பர்.
ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பவர் தான் ஆசிரியர். மேலும், மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து, அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞராக, மேதையாக உயர்த்தும் உன்னத பணி ஆசிரியர் பணி என்பதை யாராலும் மறுக்க இயலாது.
Recent Posts
ஹரிவன்ஷ் ராய் பச்சன்
பி. பி. ஸ்ரீனிவாஸ்
மனோஜ் குமார்
திருபாய் அம்பானி
Related Posts
சுதந்திர தினம்
காந்தி ஜெயந்தி
குடியரசு தினம்
ரக்ஷாபந்தன்
happy teachers’ day
the information is enough for me. thank you
Thank You for Your information
ஆசிரியர் தினம் என்பது ஒரு உன்னதமான பணியை மேற்கொள்ளும் சுயநலமற்ற ஆசிரிய பணியாளர்களுக்காக கொண்டாடப்படும் விழா (உற்சாகப்படுத்த )ஆகும்.
ஆசிரியர் ஒருவர் தான் தான் கற்ற கல்வி , அனுபவம், வித்தைகள் ஒழிவு மறைவின்றி மாணவர்களுக்கு கற்றுகொடுக்கக்கூடிய உன்னதமான புருஷர்கள், இவர்களை வணங்கி வாழ்த்துவோம்.
இந்த சமுதாயத்தில் நல் மணிதர்களை உருவாக்கும் சக்தி ஆசிரியர் என்னும் திருமந்திரமே. வணங்குவோம் ஆசிரியப் பெருந்தகைகளை.
வணங்கி வாழ்த்தும் என்றும் கற்றுகொள்ள ஆர்வமுடன் உள்ள உண்மை மாணவன் முத்து காமாட்சி
thank you for the essay. after searching of two days i got the essay in this website thank you for the good essay in tamil. i dont know to type in tamil so ….
- சிறுவர் கதைகள்
- பொன் மொழிகள்
- திருக்குறளின் சிறப்பு
- தினம் ஒரு திருக்குறள்
- இயற்கை அனர்த்தம்
- உருவங்கள் வரையும் முறைகள்
- பொது அறிவு – உளச்சார்பு
- பொதுவான சிந்தனைகள்
- சிறுவர் ஆக்கம்
- விளையாட்டுக்கள்
- விடியோக்கள்
- பிரயாணங்கள்/சுற்றுலா
- அழகான புகைப்படங்கள்
- சிறுவர் சமையல்
- மூலிகைகளை சேகரிப்போம்
- அரச வேலை வாய்ப்புக்கள்
- தொழில்நுட்பம்
- சிறுவர் தொலைக்காட்சி
- கருத்துக்கள்
- சிறுவர் செய்திகள்
உலக காலநிலை
ஆசிரியர் தினம் Teachers Day
Teachers Day ஆசிரியர் தினம்
கருவறையில் இருந்து வெளிவரும் ஒரு குழந்தைக்கு அந்த தாய் உலகை அடையாளம் காட்டுகிறாள். அந்த உலகை புரிந்து பண்பட்டவனாய் வாழும் கலையை ஆசிரியர் தான் அந்த குழந்தைக்கு செவ்வனே கற்று கொடுத்து மனிதனை மனிதனாக மாற்றும் வேலையை செய்கின்றனர்.
அந்த உண்ணதமான பணியை செய்யும் ஆசிரியர்களை நினைவுகூறும் விதமாகவும், நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதி சர்வபள்ளி திரு.ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்.
அவர் ஒரு சிறந்த ஆசிரியராக மட்டும் இல்லாமல் சிறந்த தத்துவமேதையாகவும், சிறந்த கல்வியாளராகவும் விளங்கினார். இந்தியாவில் 1962 முதல் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 5ஆம் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
ஆசிரியர் தினத்தில் உங்கள் ஆசிரியருக்கு என்ன பரிசு கொடுக்கலாம் ?
ஆசிரியர் பணியின் சிறப்பு:
ஒவ்வொரு நாட்டின் எதிர்கால வளர்ச்சி அந்த நாட்டின் வகுப்பறையில் தான் உருவாக்கப்படுகிறது. ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உலகம் இன்றளவும் பல்துறை அறிஞர்களை பெற்றுக் கொண்டிருக்கிறது.
ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பது தான் ஆசிரியரின் சிறப்புகளில் மிகவும் பிரதானமாக உள்ளது. மேலும் மாணவ சமூகத்துக்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என்று அனைத்தையும் ஒரு சேர கற்றுக்கொடுத்து அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, நாணயமானவனாக, அறிஞராக, மேதையாக சமூகத்தின் உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்லும் உயரிய பொறுப்பு ஆசிரியரின் சிறப்பு.
ஆசிரியர் தின கவிதை
ஆசிரியரின் தகுதிகள்:
இன்றைய இயந்திரதனமான, போட்டிகள் நிறைந்துவிட்ட இவ்வுலகில் ஒரு மாணவனை தலைசிறந்த மாணவனாக மாற்ற ஆசிரியரின் பங்கு மிகவும் முக்கியமானது. மாணவர்களுக்கு அன்பான, அழகான முறையில் படிப்பின் அவசியத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் கூற வேண்டும்.
ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் தனிப்பட்ட ஆர்வம், ஈடுபாடு, ஆசை இருக்கும் அதை அந்த மாணவர்கள் புரிந்துகொள்ளும்படி செய்ய வேண்டும். ஒரு மாணவனை ஒழுக்கமுள்ளவனாகவும், நல்ல சிந்தனை உள்ளவனாகவும், கண்ணியமானவனாகவும் உருவாக்குவதில் ஆசிரியர்கள் தங்களுடைய அறிவையும், பொன்னான நேரத்தையும், மேலான உழைப்பையும் முதலீடு செய்பவர்களாக இருக்க வேண்டும்.
மாணவர்கள் தொடர்ந்து தங்களுடைய அறிவை பெருக்குவதில் ஆசிரியர்கள் உந்துசக்தியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் முறையான வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும்.
“ஆசிரியரான உங்களுக்கு ஏன் இந்த வீண் வேலை?” என்ற சிறை அதிகாரியின் கேள்விக்கு “ஆசிரியர் என்பவன் கற்பித்தால் மட்டும் போதாது அதை முழுவதும் நம்புபவனாகவும் அதன்படியே நடப்பவனாகவும் இருக்க வேண்டும்” என்று பாலைவனச் சிங்கம் என்று அன்போடு அழைக்கப்படும் உமர் முக்தார் அவர்களின் பதிலில் உள்ள நம்பிக்கையையும், உறுதியையும் முன்மாதிரியாக ஒவ்வொரு ஆசிரியரும் கடைபிடித்து நாளைய சமூகத்தை முன்னேற்றும் பணியில் முதன்மையாக இருக்க வேண்டும்.
ஆசிரியர் தினம் பேச்சு
ஆசிரியரின் இன்றைய நிலை:
ஆசிரியர்கள் தங்களுடைய இந்த பணியை மிகவும் தியாக உணர்வுடனும், பொறுப்புணர்வுடனும், கடமை உணர்வுடனும் பணியாற்ற வேண்டும் மாறாக இன்றைய ஆசிரியர்களில், பெரும்பாலானவர்கள் சம்பளத்துக்கு வேலை பார்க்கும் தொழிலாகத் தான் கருதுகின்றனர்.
பாடத்திட்டத்தில் சில ஆசிரியர்களுக்கு ஆர்வமற்ற ஆளுமையற்ற சூழல், கற்பித்தல் முறையில் தெளிவின்மை, சில ஆசிரியார்கள் குறிப்பிட்ட மாணவர்களுக்கு மற்றும் பாடங்களை சொல்லிக் கொடுத்து மந்தமான மாணவர்களை மட்டந்தட்டுவது, தன்னிடம் டியுஷன் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் நன்றாக சொல்லிக்கொடுப்பது, சீரற்ற பழக்கவழக்கங்களை மாணவர்கள் முன்பு செய்தல் போன்ற பொறுப்பற்ற நடவடிக்கைகளால் மாணவ சமுதாயம் ஒழுக்க நடவடிக்கைகளை மீறுபவர்களாக உள்ளனர்.
சமீப காலமாக பத்திரிக்கை வாயிலாகவும், தொலைகாட்சி வாயிலாகவும் பார்க்கும் ஒரு சில ஆசிரியர்களின் பாலுணர்வை தூண்டும் நடவடிக்கைகள் மாணவ சமுதாயத்திலும், பெற்றோர்கள் மத்தியிலும் ஒருவித அச்ச உணர்வுகளை ஏற்படுத்துவதாகவும், ஆசிரியர்கள் மீதுள்ள நன்மதிப்பை குழைக்கும் விதமாகவும் உள்ளது.
ரத்தின சுருக்கமாக சொன்னால் சொல்லுக்கும், செயலுக்கும் உள்ள தூரம் அதிகமாக உள்ளது.
இந்த நிலை தொடருமேயானால் குற்றம் செய்பவர்களும், சட்டத்தை மதிக்காதவர்களும், ஒழுக்கத்தை பேணாதவர்களும் அதிகரித்து நாட்டின் வளர்ச்சி என்பது பாரதூரமான விஷயமாக மாறிவிடும்.
ஆசிரியர் பற்றி திருக்குறள் கூறாமைக்கான காரணம்
ஆசிரியர் மாணவர் உறவு:
வகுப்பறைகள் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும் மாறாக இன்றைய வகுப்பறைகள் மாணவர்கள் மீது அதிகாரத்தை செலுத்தும் இடமாக காட்சியளிக்கிறது.
அக்கறையற்ற தண்டனைகளால் அன்பு கலந்த கண்டிப்புகள் குறைந்து ஆசிரியர்களை மாணவர்கள் ஒரு எதிரியாக பாவிக்கக்கூடிய சூழல் வளர்ந்து வருகிறது. இதனால் அந்த மாணவன் ஆசிரியரை மட்டும் வெறுக்காமல் அவர் சொல்லிக் கொடுக்கும் பாடத்தையும், பள்ளியையும் வெறுக்கக்கூடிய சூழல்கள் அதிகரிக்கிறது.
மாணவர்களை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் காயப்படுத்தும் இடமாக வகுப்பறைகள் மாறிவிடுவது நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது.
“ஒரு சமயம் அரிஸ்டாட்டில் தம் மாணவருடன் ஆற்றின் கரைக்கு வந்தார். மாணவர்களை கரையில் நிற்க வைத்தவர், நான் சென்று ஆற்றில் ஏதாவது சுழல்கள் உள்ளதா என பார்த்து வருகிறேன் என்றார். அவர் ஆயத்தம் கொண்ட சமயம் அவரின் ஒரு மாணவர் தண்ணீரில் நீந்தி செல்வதை கண்டார். மறுகரை வரை சென்று திரும்பிய மாணவர், குருவே சுழல்கள் இல்லை நாம் தைரியமாக ஆற்றைக் கடக்கலாம் என்றார். அந்த நிலையில் அரிஸ்டாட்டில் உன்னை சுழல்கள் எடுத்து சென்றிருந்தால் என்னவாகி இருக்கும் என்றார். அதற்கு அந்த மாணவன் இவ்வாறு பதில் கூறினான் “இந்த அலெக்சாண்டர் போனால் ஆயிரம் அலெக்சாண்டரை உருவாக்கும் வல்லமை கொண்டவர் நீங்கள். ஆனால் ஒரு அரிதான குருவை இழந்தால் நாங்கள் பரிதவித்து போவோம்.”
ஆசிரியர் மாணவர் உறவு என்பது தாய் மகன் உறவு போன்றது, ஒரு தாய் எப்படி தன் பிள்ளைகளின் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவாலோ அதே போன்றதொரு அக்கறையையும் ஆசிரியர்கள் செலுத்தும் போது தான் ஆசிரியர் மாணவர் உறவு என்பது வலுப்பெறும். மேலும் மேம்பட்ட கற்பித்தல் திறனும் ஆசிரியர் மாணவர் உறவுக்கு வலு சேர்க்கும்.
எதிர்கால சமூகத்தை வடிவமைக்கும் பாரிய பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ள ஆசிரியர் சமூகம் தங்கள் பணியை திறம்பட செய்து மாணவர் உலகில் மாற்றத்தை கொண்டு வந்து நாளைய இந்தியாவை வல்லரசாக ஆக்க வேண்டும்!! ஆசிரியர் உலகுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.
kidhours – Teacher’s day in Tamil
திருக்குறளின் சிறப்புகள்
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் சொல்லும் அம்மா
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
தினம் ஒரு திருக்குறள் கற்போம்
சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சிறுவர் சுகாதாரம்
பொது அறிவு – உளச்சார்பு
சிறுவர் கட்டுரை
பொழுதுபோக்கு
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
YouTube Channel ” kidhours
- asiriyar thinam
- Teacher's Day
- ஆசிரியர் தினம்
உலக மகளீர் தினம் மார்ச் – 8 Women’s Day In Tamil 8th of Murch
சிறு கட்டுரை – ”நேர்மை தவறாத சிறுவன் ” tamil short essay honesty, தவளை பற்றிய முக்கிய குறிப்புக்கள் about the frog, இலங்கை சுதந்திரம் பெற்ற வரலாற்றுக் கட்டுரை history of independence day sri lanka, சிறுத்தை புலி பற்றிய ஆங்கில சிறு கட்டுரை english short essay about leopard, குதிரை பற்றிய சிறுகட்டுரை tamil short essay horse, most popular, ”ஆபயன் குன்றும் அறுதொழிலோர்….” தினம் ஒரு திருக்குறள் கற்போம் thirukkural 560, வெப்ப காலநிலையால் மூடப்பட்ட 100 பாடசாலைகள் schools closed by heat, உலகின் மகிழ்ச்சியான நாடுகள் world happiest countries, ”முறைகோடி மன்னவன் செய்யின்…..” தினம் ஒரு திருக்குறள் கற்போம் thirukkural 559, ஒரே நேரத்தில் ஏவப்பட்ட 23 செயற்கைக்கோள்கள் எங்கு தெரியுமா 23 satellite, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்த புதிய நாடுகள் new european union countries, editor picks, popular posts, popular category.
- சிறுவர் செய்திகள் 2194
- பொது அறிவு - உளச்சார்பு 578
- தினம் ஒரு திருக்குறள் 526
- உலக காலநிலை 289
- கட்டுரை 161
- பெற்றோர் 83
- புவியியல் 76
Contact us: here
© 2023 Kidhours.com. All Rights Reserved.
- Privacy Policy
- Terms and Conditions
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!
எமது Facebook இல் இணைந்து
பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.
- USES IN TAMIL
- ESSAY & SPEECH
TEACHERS DAY ESSAY IN TAMIL 2023: ஆசிரியர் தினத்திற்கான கட்டுரை 2023
TEACHERS DAY ESSAY IN TAMIL 2023: புகழ்பெற்ற தத்துவஞானி, அறிஞரும், இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவருமான டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
டாக்டர் ராதாகிருஷ்ணன் செப்டம்பர் 5, 1888 இல் பிறந்தார், மேலும் கல்விக்கான அவரது பங்களிப்புகள் மற்றும் ஆசிரியர்கள் மீதான அவரது ஆழ்ந்த மரியாதை ஆகியவை அவரது நினைவாக இந்த சிறப்பு தினத்தை நிறுவ வழிவகுத்தது.
TO KNOW MORE ABOUT – MIDJOURNEY PROMO CODE
இந்தியாவில் ஆசிரியர் தினத்தின் வரலாற்றை 1962 ஆம் ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் இந்தியக் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார். அவரது பிறந்தநாளைக் கொண்டாட அவரது மாணவர்கள் மற்றும் நண்பர்கள் சிலர் அவரை அணுகியபோது, அவரது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, அனைத்து ஆசிரியர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் நாளாகக் கடைப்பிடிப்பது மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று அவர் பரிந்துரைத்தார்.
FRIENDSHIP DAY WISHES IN TAMIL 2023: நட்பு தின வாழ்த்துக்கள்
TEACHERS DAY ESSAY IN TAMIL 2023: ஒரு தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஆசிரியர்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள் என்றும் அவர்களின் பங்களிப்புகள் அங்கீகரிக்கப்பட்டு கொண்டாடப்பட வேண்டும் என்றும் அவர் நம்பினார்.
1962ல் இந்தியாவில் முதல் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. அப்போதிருந்து, இது ஒரு வருட பாரம்பரியமாகிவிட்டது. இந்த நாளில், நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் அவர்கள் அளிக்கும் மதிப்புமிக்க அறிவு ஆகியவற்றிற்காக தங்கள் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றனர்.
பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் கலாச்சார நிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழாக்கள் மற்றும் உரைகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றன.
ஆசிரியர் தினம் என்பது ஆசிரியர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் நாள் மட்டுமல்ல, கல்வியின் முக்கியத்துவம் மற்றும் சமூகத்தில் ஆசிரியர்களின் பங்கு பற்றிய சுயபரிசீலனைக்கான நாளாகவும் உள்ளது. கல்வியில் சிறந்து விளங்க ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இருவரையும் ஊக்குவிக்கும் மற்றும் ஊக்குவிக்கும் நாள்.
செப்டம்பர் 5 ஆம் தேதிக்கு கூடுதலாக, உலக ஆசிரியர் தினமும் உள்ளது, இது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5 ஆம் தேதி சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள நாடுகளின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஆசிரியர்களின் முக்கிய பங்கை அங்கீகரித்து பாராட்டுவதற்காக 1994 இல் யுனெஸ்கோவால் இந்த நாள் நிறுவப்பட்டது.
TEACHERS DAY ESSAY IN TAMIL 2023: இந்தியாவில், ஆசிரியர் தினம் கல்வியாளர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும், நாட்டின் வளர்ச்சியில் கல்வியின் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க சந்தர்ப்பமாக உள்ளது. ஆசிரியர்-மாணவர் உறவு மற்றும் சமூகத்தில் கல்வியின் நீடித்த தாக்கம் பற்றிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பார்வையை இது நினைவூட்டுகிறது.
Table of Contents
TEACHERS DAY ESSAY IN TAMIL 2023 / இந்தியாவில் ஆசிரியர் தினத்திற்கான கட்டுரை
TEACHERS DAY ESSAY IN TAMIL 2023: இந்தியாவில் ஆசிரியர் தினம் என்பது மதிப்பிற்குரிய தத்துவவாதியும், அறிஞரும், இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவருமான டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 5ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்த நாள் மகத்தான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, ஏனெனில் இது ஒரு சிறந்த அரசியல்வாதிக்கு மரியாதை செலுத்துவது மட்டுமல்லாமல், ஒரு நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் கல்வியாளர்களின் முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
வரலாற்று ஆதியாகமம்
TEACHERS DAY ESSAY IN TAMIL 2023: இந்தியாவில் ஆசிரியர் தினத்தின் வரலாற்றை 1962 ஆம் ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். அவரது மாணவர்களும் நண்பர்களும் அவரது பிறந்த நாளைக் கொண்டாட முன்வந்தபோது, அவர் தனது பிறந்த நாளை அனைத்து ஆசிரியர்களுக்கும் அர்ப்பணிக்க வேண்டும் என்று கருணையுடன் பரிந்துரைத்தார்.
ஆசிரியர்கள் அறிவின் ஜோதியாகவும், முற்போக்கான சமுதாயத்தின் தூண்களாகவும் இருப்பதாக டாக்டர் ராதாகிருஷ்ணன் நம்பினார். எனவே, இந்த அர்த்தமுள்ள பாரம்பரியத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், முதல் ஆசிரியர் தினம் அவரது நினைவாக கொண்டாடப்பட்டது.
கொண்டாட்டம் மற்றும் மரியாதை
TEACHERS DAY ESSAY IN TAMIL 2023: நாடு முழுவதும் ஆசிரியர் தினம் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள், தங்கள் ஆசிரியர்களுக்கு தங்கள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவிக்க இந்த நாளை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறார்கள்.
கல்வி நிறுவனங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழாக்கள், மற்றும் கல்வியாளர்களின் அயராத முயற்சிகளைக் கௌரவிக்கும் வகையில், இதயப்பூர்வமான உரைகள் உட்பட பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்கின்றன.
To Test your Typing Speed & Accuracy – ZTYPE GAME
கல்வியில் மட்டுமல்ல, குணநலன் உருவாக்கம் மற்றும் வாழ்க்கைப் பாடங்களின் அடிப்படையிலும் ஆசிரியர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும் ஆழமான தாக்கத்தை மாணவர்கள் ஒப்புக்கொள்ளும் நாள்.
டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் செய்தி
TEACHERS DAY ESSAY IN TAMIL 2023: டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் வாழ்க்கையும் பணியும் காலத்தால் அழியாத உத்வேகமாக விளங்குகிறது. சமூகத்தில் கல்வி மற்றும் ஆசிரியர்களின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்துவது ஆசிரியர் தினத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
அவர் ஒருமுறை பிரபலமாக கூறினார், “ஆசிரியர்கள் நாட்டின் சிறந்த சிந்தனையாளர்களாக இருக்க வேண்டும்.” ஆசிரியர்கள் அறிவை மட்டும் போதிக்காமல், மதிப்புகள், ஞானம் மற்றும் கற்றல் மீதான அன்பை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பதே அவரது பார்வை.
ஆசிரியர் தினம் அவரது தொலைநோக்குப் பார்வையை நினைவூட்டுகிறது, கல்வியாளர்கள் மற்றும் கற்பவர்கள் இருவரையும் கல்வியில் சிறந்து விளங்க பாடுபட ஊக்குவிக்கிறது.
தேசத்தை கட்டியெழுப்புவதில் கல்வியின் பங்கு
TEACHERS DAY ESSAY IN TAMIL 2023: ஆசிரியர் தினம் என்பது வெறும் கொண்டாட்ட நாளல்ல; இது சிந்திக்க வேண்டிய நாள். ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் கல்வியின் முக்கிய பங்கைப் பற்றி சிந்திக்க இது நம்மைத் தூண்டுகிறது.
அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களால் வழங்கப்படும் தரமான கல்வி வளமான சமுதாயத்தின் அடித்தளமாகும். ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு கல்வியில் முதலீடு செய்வதும் அதற்கு வசதி செய்பவர்களை கவுரவிப்பதும் அவசியம் என்ற எண்ணத்தை ஆசிரியர் தினம் வலுப்படுத்துகிறது.
TEACHERS DAY ESSAY IN TAMIL 2023: இந்தியாவில் ஆசிரியர் தினம் என்பது நன்றியுணர்வு, பிரதிபலிப்பு மற்றும் கொண்டாட்டத்தின் நாள். எதிர்காலத்தின் மனதை வளர்த்து வடிவமைக்கும் நமது கல்வியாளர்களின் அயராத முயற்சிக்கு நாம் அஞ்சலி செலுத்தும் நாள்.
டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் ஞானத்தில் இந்த நாளின் வரலாற்று வேர்கள், ஆசிரியர்கள் தனிநபர்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் மீது ஏற்படுத்தக்கூடிய ஆழமான தாக்கத்தை நமக்கு நினைவூட்டுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தை நாம் கொண்டாடும் போது, கல்விக்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்வோம், மேலும் இந்தியாவிற்கும் உலகிற்கும் பிரகாசமான மற்றும் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதில் ஆசிரியர்கள் வகிக்கும் முக்கிய பங்கை அங்கீகரிப்போம்.
RELATED ARTICLES MORE FROM AUTHOR
TEACHERS DAY SPEECH IN TAMIL 2023: இந்தியாவில் ஆசிரியர் தினத்திற்கான 15 நிமிட உரை 2023
Most popular.
KNOW POWERCUT OF YOUR AREA 2023: உங்கள் ஊரில் மின்தடை எப்போது? TANGENGO...
THALAPATHY VIJAY 67 – LEO: யாரும் எதிர்பார்க்காத தளபதி 67 டைட்டில் இதுதான்
RAKSHA BANDHAN WISHES IN TAMIL 2023: ரக்ஷா பந்தன் 2023 வாழ்த்துக்கள்
HRA MEANING IN TAMIL 2023: HRA என்பதன் தமிழ் அர்த்தம் என்ன?
Editor picks.
VINAYAGAR CHATURTHI WISHES IN TAMIL 2024 | GANESH CHATURTHI WISHES IN...
VALENTINE’S DAY WISHES IN TAMIL (LOVERS DAY WISHES IN TAMIL) 2024...
LALITHA SAHASRANAMAM LYRICS IN TAMIL 2024: லலிதா சஹஸ்ரநாமம் பாடல் வரிகள்
Popular posts.
Palli Vilum Palan in Tamil: பல்லி விழும் பலன்கள் மற்றும் அதன் பரிகாரங்கள்...
CHIA SEEDS IN TAMIL 2023: சியா விதையின் நன்மைகள்
CRINGE MEANING IN TAMIL 2023: Cringe-ன்னா என்னங்க? அதுக்கு தமிழில் அர்த்தம் என்ன?
Popular category.
- உடல்நலம் 55
- CINEMA NEWS 30
- USES IN TAMIL 19
- NEWS & ARTICLE 18
- TECHNOLOGY 18
- வேலைவாய்ப்பு / EMPLOYMENT 17
- MEANING IN TAMIL 16
- ஆன்மிகம் 15
- Terms and Conditions
- Privacy Policy
TEACHERS DAY SPEECH IN TAMIL 2023: இந்தியாவில் ஆசிரியர் தினத்திற்கான 15 நிமிட...
ஆசிரியர் தினம் கட்டுரை | ஆசிரியர் தினம் பேச்சு போட்டி கட்டுரை | Teachers Day Speech In Tamil
Table of Contents
Teachers Day Speech In Tamil | Teachers Day Katturai In Tamil
Teachers Day Speech In Tamil | Teachers Day Katturai In Tamil: ஆசிரியர் தினம் என்பது நமது சமுதாயத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் கல்வியாளர்களை கௌரவிக்கும் ஒரு சிறப்பு நிகழ்வாகும். இளம் மனங்களை வளர்ப்பதற்கும் அறிவைப் புகட்டுவதற்கும் அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு நமது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கும் நாள். இக்கட்டுரையில், ஆசிரியர் தினத்தின் முக்கியத்துவம், அதன் வரலாறு, சமூகத்தில் ஆசிரியர்களின் பங்கு மற்றும் நாம் கொண்டாடும் விதம் மற்றும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதம் ஆகியவற்றை ஆராய்வோம்.
ஆசிரியர் தினத்தின் முக்கியத்துவம் | Teachers Day Tamil Speech
ஆசிரியர் தினமானது கல்வியாளர்களின் தன்னலமற்ற பங்களிப்பை அங்கீகரிக்கும் வாய்ப்பை வழங்குவதால் மகத்தான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. ஆசிரியர்கள் எந்த ஒரு கல்வி முறையிலும் தூண்கள், அவர்களின் செல்வாக்கு வகுப்பறைக்கு அப்பால் நீண்டுள்ளது. அவை மாணவர்களை ஊக்கப்படுத்துகின்றன, ஊக்குவிக்கின்றன மற்றும் வழிகாட்டுகின்றன, கல்வி அறிவை மட்டுமல்ல, வாழ்க்கைத் திறன்கள், மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளையும் அவர்களுக்குள் புகுத்துகின்றன.
ஆசிரியர் தின வரலாறு | Teachers Day History In Tamil
ஆசிரியர் தினத்தின் வரலாறு பண்டைய நாகரிகங்களில் இருந்து தொடங்குகிறது, அங்கு ஆசிரியர்கள் குருக்கள் அல்லது வழிகாட்டிகளாக மதிக்கப்பட்டனர். இந்தியாவில், சிறந்த அறிஞரும் இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் (Dr. Sarvapalli Radhakrishnan) பிறந்தநாளைக் குறிக்கும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
கல்வி மற்றும் தத்துவத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பங்களிப்புகள் அவரை ஆசிரியர்களின் முக்கியத்துவத்தின் அடையாளமாக மாற்றியது. அவரது பாரம்பரியத்தை போற்றும் வகையில், அவரது பிறந்த நாள் இந்தியாவில் ஆசிரியர் தினமாக அறிவிக்கப்பட்டது.
சமூகத்தில் ஆசிரியர்களின் பங்கு
Teachers Day History In Tamil: ஆசிரியர்கள் சமூகத்தில் பன்முகப் பங்கு வகிக்கின்றனர். அவர்கள் அறிவை கடத்துபவர்கள் மட்டுமல்ல, வழிகாட்டிகள், ஆலோசகர்கள் மற்றும் முன்மாதிரிகள். ஆசிரியர்களுக்கு இளம் மனதை வடிவமைக்கும் ஆற்றல் உள்ளது மற்றும் மாணவர்களின் திறனைக் கண்டறிய உதவுகிறது. அவை வழிகாட்டுதலையும் ஆதரவையும் வழங்குகின்றன, அறிவார்ந்த ஆர்வத்தையும் கற்றலுக்கான அன்பையும் வளர்க்கின்றன.
ஒரு நல்ல நபரின் வளர்ச்சிக்கு ஆசிரியர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறார்கள். மாணவர்கள் பொறுப்புள்ள மற்றும் இரக்கமுள்ள குடிமக்களாக மாறுவதற்கு முக்கியமான மதிப்புகள், நெறிமுறைகள் மற்றும் சமூக திறன்களை அவர்கள் வழங்குகிறார்கள்.
மேலும், ஆசிரியர்கள் பெரும்பாலும் தங்கள் கடமைக்கு அப்பாற்பட்டு, மாணவர்கள் தனிப்பட்ட சவால்களைச் சமாளிக்க உதவுகிறார்கள் மற்றும் அவர்கள் தங்களை வெளிப்படுத்த பாதுகாப்பான இடத்தை வழங்குகிறார்கள்.
இன்றைய வேகமான மற்றும் எப்போதும் மாறிவரும் உலகில், வளர்ந்து வரும் கல்வி நிலப்பரப்புக்கு ஏற்றவாறு ஆசிரியர்கள் புதிய கற்பித்தல் முறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை மாற்றியமைக்கின்றனர்.
அவை கல்விப் பாடங்களைக் கற்பிப்பது மட்டுமல்லாமல், மாணவர்களை விமர்சன சிந்தனை திறன், சிக்கலைத் தீர்க்கும் திறன் மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு ஆகியவற்றுடன் சித்தப்படுத்துகின்றன.
ஆசிரியர் தினத்தை கொண்டாடுவதற்கான வழிகள்
ஆசிரியர் தினத்தை கொண்டாடுவதற்கான சில வழிமுறைகள் பின்வருமாறு
நன்றியை வெளிப்படுத்துதல்: ஆசிரியர் தினத்தை கொண்டாடுவதற்கான எளிய மற்றும் அர்த்தமுள்ள வழிகளில் ஒன்று நன்றியை வெளிப்படுத்துவதாகும். இதயப்பூர்வமான நன்றிக் குறிப்பு, கையால் செய்யப்பட்ட அட்டை அல்லது தனிப்பட்ட செய்தி ஆகியவை ஆசிரியர்களின் முயற்சிகள் பாராட்டப்படுவதைத் தெரியப்படுத்துவதில் நீண்ட தூரம் செல்லும்.
கலாச்சார நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்தல்: பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பெரும்பாலும் கலாச்சார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றன, அங்கு மாணவர்கள் இசை, நடனம், நாடகம் மற்றும் கவிதை மூலம் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள். இந்த நிகழ்வுகள் ஒரு பண்டிகை சூழ்நிலையை உருவாக்குகின்றன மற்றும் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு தங்கள் அபிமானத்தை வெளிப்படுத்த அனுமதிக்கின்றன.
விருதுகள் மற்றும் அங்கீகாரம்: பல கல்வி நிறுவனங்கள் சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்குகின்றன. சகாக்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை அங்கீகரிப்பது சிறந்த உந்துதலுக்கு ஆதாரமாக இருக்கும்.
தொழில்முறை மேம்பாட்டு வாய்ப்புகள்: அவர்களின் தொழில்முறை வளர்ச்சியில் ஆசிரியர்களுக்கு ஆதரவளிப்பது பாராட்டைக் காட்ட மற்றொரு வழியாகும். பட்டறைகள், பயிற்சி மற்றும் ஆதாரங்களுக்கான அணுகலை வழங்குவது, அவர்கள் சமீபத்திய கற்பித்தல் முறைகள் மற்றும் தொழில்நுட்பங்களுடன் புதுப்பித்த நிலையில் இருக்க உதவுகிறது.
சமூக ஈடுபாடு: சில சமூகங்களில், ஆசிரியர் தினம் பரந்த அளவில் கொண்டாடப்படுகிறது. உள்ளூர் வணிகங்கள் மற்றும் நிறுவனங்கள் ஆசிரியர்களுக்கு தள்ளுபடிகள் அல்லது சிறப்பு சலுகைகளை வழங்கலாம், மேலும் சமூக உறுப்பினர்கள் பல்வேறு வழிகளில் கல்வியாளர்களுக்கு உதவ தங்கள் நேரத்தை முன்வந்து வழங்கலாம்.
கருணைச் செயல்கள்: மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்காக கருணைச் செயல்களைச் செய்ய ஊக்குவிப்பது, கொண்டாடுவதற்கான ஒரு அற்புதமான வழியாகும். வகுப்பறையைச் சுத்தம் செய்தல், தின்பண்டங்களைக் கொண்டு வருதல் அல்லது நிர்வாகப் பணிகளில் உதவுதல் போன்ற செயல்கள் ஆசிரியர் தினத்தை மேலும் நிர்வகிக்கக்கூடியதாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் மாற்றும்.
ஆசிரியர்-மாணவர் தொடர்பு: ஆசிரியர் தினம் மிகவும் அர்த்தமுள்ள ஆசிரியர்-மாணவர் தொடர்புகளுக்கு ஒரு வாய்ப்பாக அமையும். மாணவர்கள் தங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்ளும் திறந்த விவாதங்கள், ஆசிரியர்-மாணவர் பிணைப்பை வலுப்படுத்தும்.
முடிவுரை | Teachers Day Speech Tamil
Teachers Day Speech In Tamil: ஆசிரியர் தினம் என்பது மகத்தான முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும், ஏனெனில் இது நமது வாழ்க்கையையும் சமூகத்தையும் வடிவமைப்பதில் கல்வியாளர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பை அங்கீகரிக்கிறது. ஆசிரியர் தினத்தின் வரலாறு, ஆசிரியர்களின் பன்முகப் பங்கு மற்றும் இந்த நாளை நாம் கொண்டாடக்கூடிய பல்வேறு வழிகள் அனைத்தும் அவர்களின் முயற்சிகளை அங்கீகரிப்பதன் மற்றும் பாராட்டுவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன.
ஆசிரியர் தினத்தைக் கொண்டாடும் வேளையில், ஆசிரியர் பணி என்பது வெறும் தொழில் மட்டுமல்ல; இது நாடுகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும் உன்னதமான அழைப்பு. நம் ஆசிரியர்கள் நமக்கு அறிவு மற்றும் ஞானத்தின் பாதையை ஒளிரச் செய்யும் வழிகாட்டி விளக்குகள். இந்த நாளில் மட்டுமல்ல, ஆண்டு முழுவதும், நமது கல்வியாளர்கள் தொடர்ந்து ஊக்கமளித்து, வரவிருக்கும் தலைமுறைகளுக்கு அதிகாரம் அளிப்பதை உறுதிசெய்வதற்கு நமது நன்றியையும் ஆதரவையும் தெரிவிக்க வேண்டியது நமது பொறுப்பு.
எனவே, இந்த ஆசிரியர் தினத்தில், நமது ஆசிரியர்களின் இடைவிடாத அர்ப்பணிப்புக்காக ஒரு கணம் நன்றி செலுத்துவோம், மேலும் நம் வாழ்வில் அவர்களின் பங்கை மதிப்பிடுவதற்கும் மதிப்பதற்கும் உறுதி கொள்வோம். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் நமது எதிர்காலத்தின் உண்மையான கட்டிடக் கலைஞர்கள்.
Leave a Comment Cancel reply
Save my name, email, and website in this browser for the next time I comment.
- Terms of Services
- Privacy Policy
- வேலைவாய்ப்பு
- குழந்தை நலன்
- இயற்கை விவசாயம்
- மாடித்தோட்டம்
- சொட்டு நீர் பாசனம்
- மெஹந்தி டிசைன்
- சமையல் குறிப்பு
ஆசிரியர் தினம் பேச்சு போட்டி கட்டுரை | ஆசிரியர் பற்றிய கட்டுரை | Teachers Day Speech in Tamil
ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை | Aasiriyar Thinam Katturai in Tamil | teachers day speech in tamil
ஆசிரியர் தின கட்டுரை | teachers day speech in tamil: டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை தான் நாம் அனைவரும் வருடா வருடம் செப்டம்பர் 05-ஆம் தேதியன்று மிக விமர்சையாக மாணவர்கள் அனைவரும் ஆசிரியர் தினத்தினை கொண்டாடி வருகிறார்கள். டாக்டர் ராதாகிருஷ்ணன் தமது வாழ்நாள் முழுவதும் நல்ல ஆசிரியராக மாணவர்கள் அனைவருக்கும் நல்ல வழிகாட்டியாக விளங்கியவர். ஆசிரியர்கள் என்றாலே ஒழுக்கம், பண்பு நலன்களில், ஊக்குவிப்பு, அதிக தன்னம்பிக்கை, எதிலும் விடாமுயற்சி இன்னும் பல திறமைகளை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் நேர்மையான வழிகாட்டிகள். பல நல்வழி நன்னெறிகளை சொல்லி கொடுக்கும் ஆசிரியை பெருமக்களுக்கு நன்றி கூறும் வகையில் செப்டம்பர் 05 அன்று ஆசிரியர் தினம் தவறாமல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாணவர்களையும் நல்வழிக்கு கொண்டு போவது ஆசிரியர்களால் மட்டுமே முடியும். ஆசிரியர் திருநாளை போற்றும் வகையில் இந்த பதிவில் ஆசிரியர் பணி கட்டுரையை (teachers day speech in tamil) பற்றி படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!
ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்
டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறப்பு | டாக்டர் ராதாகிருஷ்ணன் கட்டுரை:
ராதாகிருஷ்ணன் இளங்கலை துறையில் தத்துவத்தை முதல் பாட பகுதியாக தேர்வு செய்து பி.ஏ (BA) பட்டத்தை பெற்றார். அதனை அடுத்து முதுகலை துறையில் எம். ஏ (MA) பட்டத்தினையும் பெற்றார்.
ஆசிரிய பணி | ஆசிரியர் பற்றிய கட்டுரை:
ஆசிரியர் பணி கட்டுரை: சென்னை மாவட்டத்தில் அமைவிடம் பெற்ற பிரிசிடென்சி கல்லூரியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய முதல் ஆசிரியர் பணியினை தொடங்கினார். இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரா, மற்றும் சங்கரா, ராமானுஜர், மாதவர், போன்றவர்களின் வர்ணனை கவிதைகளையும் கற்றுக்கொண்டார்.
ஆசிரியர் பற்றிய கவிதைகள்
ராதாகிருஷ்ணன் இது மட்டுமல்லாமல், பல்வேறு மத வகைகளில் புத்த மத மற்றும் ஜெயின் மதத்தில் உள்ள தத்துவம், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி, மற்றும் பெர்க்சன் போன்றவர்கள் எழுதிய தத்துவத்தினையும் கற்று தேர்ந்து, அதனுடைய சிறப்பினை நமது நாட்டிற்கு வெளிப்படுத்தியவர்.
ராதாகிருஷ்ணன் மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராக 1918-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு கல்கத்தா பல்கலைக்கழகத்தில், தத்துவப் பேராசிரியராக 1921-ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டார். 1923-ஆம் ஆண்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய “இந்திய தத்துவம்” எனும் நூல் வெளியிடப்பட்டது.
டாக்டர் ராதாகிருஷ்ணன் 1931-ஆம் ஆண்டு, ஆந்திர மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்வு செய்யப்பட்டார். அதனையடுத்து 1939-ஆம் ஆண்டு, பெனாரஸ் இந்து மதம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தார். அடுத்து 1946-ல், யுனெஸ்கோவின் தூதுவராக அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய நாடு ஆங்கிலேயரிடம் சுதந்திரம் அடைந்த பிறகு, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை, 1948-ஆம் ஆண்டு பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராக வேண்டுமென்று கேட்டுக்கொண்டது. இந்தியக் கல்வி முறையின் அனைத்து தேவைகளை நிறைவேற்ற, இந்திய நாட்டிற்கு சிறப்பான கல்வித் திட்டத்தை கொண்டு வர, ராதாகிருஷ்ணனின் ஆலோசனைகள் மிகவும் உதவிகரமாக இருந்தது.
உலக ஆசிரியர் தின வரலாறு:
teachers day speech in tamil: உலகத்தின் பல்வேறு நாடுகளில், ஒவ்வொரு தினங்களில் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளினை ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறார்கள். கல்வி சம்பந்தமாக மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களையோ, கல்வி சம்பந்தப்பட்ட சிறப்பான நிகழ்வுகளையோ நினைவுப்படுத்தும் வகையில் செப்டம்பர் 05 அன்று ஆசிரியர் தினம் வருடா வருடம் கொண்டாப்பட்டு வருகிறது.
ஆசிரியர் பணி கட்டுரை:
ஆசிரியர் பற்றிய பேச்சு: மாணவர்களுக்கு கல்வியை மட்டும் கற்றுக்கொடுப்பது ஆசிரியர் பணி இல்லை; அவர்களுக்கு ஒழுக்கத்தில் எப்படி சிறந்து விளங்குவது, அடுத்தவர்களிடம் எப்படி பழக வேண்டும், ஆன்மீக வழிபாடுகளில் எப்படி பங்கேற்க வேண்டும், பொது அறிவு சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் மாணவ செல்வங்களுக்கு தெளிவாக எடுத்து கூறுவதே ஒவ்வொரு ஆசிரியை பெருமக்களுக்கும் அது உன்னத பணியாகும். அப்படிப்பட்ட ஆசிரியர் பணி எனும் தெய்வீகப் பணியை மாணவர்களுக்கு கற்று தர, மனதில் தன்னலம் இல்லாமல், தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது; மாணவர்களுக்கு கற்று கொடுக்கும் தொழிலை வெறுப்புடன் இல்லாமல் நேசிக்கக்கூடியவர்களாக இருப்பவர் மட்டுமே உண்மையான ஆசிரியர்களுக்கு சமமாவார்கள்.
ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை | ஆசிரியர் தினம் கட்டுரை:
teachers day speech in tamil: டாக்டர் ராதாகிருஷ்ணன் தன்னுடைய வாழ்நாள் காலம் முழுவதும் தாம் செய்யும் ஆசிரியர் பணியை புனிதமாக எண்ணி மற்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கி, ஒரு மாபெரும் தத்துவ மேதையாக உலகம் முழுவதும் தன்னை வெளிப்படுத்திய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 05-ஆம் நாளினை, இந்தியாவில் 1962-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் மறக்காமல் ஆசிரியர் தினமாகக் இன்றும் அனைத்து பள்ளிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆசிரியர் தினம் எப்போது:
ஆசிரியர் தினம் கட்டுரை: வருடா வருடம் செப்டம்பர் 05-ஆம் நாள் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளினை உலக ஆசிரியர் தினமாக அனைவராலும் கொண்டாடப்படுகிறது.
ஆசிரியர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது:
teachers day speech in tamil: டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான ஆசிரியர் தினத்தையொட்டி மாணவர்கள் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களின் சிறப்பினை எடுத்துரைக்க பல தலைப்புகளில் பேச்சு போட்டி, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெறும் மாணவ செல்வங்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும். மேலும் அன்றைய தினத்தில் ஆசிரியர் (ஆசிரியர் பணி கட்டுரை) பணியில் சிறந்து பணியாற்றுபவர்களை புகழ்விக்கும் வகையில் தமிழக அரசால் அவர்களுக்கு விருதினை வழங்கி பெருமைப்படுத்தும்.
ஆசிரியர் பற்றிய பொன்மொழிகள்
மாணவர்களும் தங்களுக்கு பிடித்த ஆசிரிய பெருமக்களுக்கு அவர்களால் முடிந்த பரிசுகளை வழங்குவார்கள். மேலும், பயிலும் மாணவர்களுக்கு தேவையான உடல் ஆற்றல், ஊக்குவிப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்கு கற்று கொடுத்து, அவர்களை நல்ல முறையில் பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞராக, மேதையாக உயர்த்தும் உன்னதமான பணியே ஆசிரியர் பணி.
Related Posts
இன்றைய இறைச்சி விலை | சிக்கன் ரேட் டுடே, (03.04.2024) தங்கம் விலை இன்று மதுரை | indraya thangam vilai madurai, வரலாற்றில் இன்று என்ன நாள் தெரியுமா | today history in tamil, இன்றைய பூ விலை நிலவரம் | today flower rate in chennai, செல்வமகள் சேமிப்பு திட்டம் விதிமுறை.. sukanya samriddhi yojana scheme in tamil.., (03.04.2024) சென்னையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்.. today vegetable rate in chennai.., ஒட்டன்சத்திரம் காய்கறி விலை நிலவரம் | oddanchatram vegetable market price today, பழங்களின் இன்றைய விலை | today fruits price in chennai, santhiya annadurai.
வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.
Leave a Reply Cancel reply
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.
Recent Post
- வாட்ஸப்பில இந்த செட்டிங்ஸ்யை மாத்திடுங்க
- பகைவன் வேறு சொல்
- கேள்வி என்பதற்கான வேறு சொல் என்ன தெரியுமா..?
- International Mine Awareness Day என்றால் என்ன.?
- ஒரே வீட்டில் இரண்டு கர்ப்பிணி பெண்கள் இருக்கலாமா
- Basil Seeds என்றால் என்ன.?
- கோடி பலன்களை அள்ளித்தரும் ராம நாம மந்திரம்..!
- இந்த இரண்டு செடிகளை துளசியோடு நட்டால் அதிஷ்டம் உங்களை தேடி வரும் ..!
- அஜித் ராசி நட்சத்திரம்
- நவகிரகத்தை எத்தனை முறை சுற்ற வேண்டும் தெரியுமா.?
- தலையில் இரட்டை சுழி இருந்தால் இரண்டு திருமணம் நடக்குமா..?
- உலக சுகாதார தினம் கவிதை
© 2024 Pothunalam.com - About Us Pothunalam.com Owned by Weby Adroit Infotech LLP. Contact: [email protected] Thiruvarur District -614404
© மேலும் இதில் பதிவிடும் தகவல்கள் அனைத்தும் பல இணையதளத்தில் கிடைக்கும் அல்லது சேர்க்கப்பட்டுள்ள விவரங்கள் மட்டுமே, பிழைகள் அல்லது அச்சு பிழைகள் இருக்கலாம். இந்தச் சேவையை நம்பினால் அல்லது இந்த pothunalam.com வழியாகக் கிடைக்கும் எந்த ஒரு கருத்தையும் ஏற்று நீங்கள் முடிவெடுத்தால், உங்களுடைய சொந்த முயற்சியில்தான் அதைச் செய்கிறீர்கள். இந்த தளத்தில் சொல்லப்பட்ட தகவல், தயாரிப்புகள், மற்றும் சேவைகள் சம்பந்தப்பட்ட பிற பிரச்சனைகளை நீங்கள் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டும். நீங்கள் சுயமாக எடுக்கும் முடிவிற்கு இந்த வலைத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.
Tamil Quotes
ஆசிரியர் தினம் சிறப்பு கட்டுரை – Teachers Day Tamil
இன்றைய காலகட்டத்தில் ஒரு மனிதன், தன் குழந்தை மற்றும் இளமைப் பருவத்தை தாய் தந்தையருடன் செலவிடுவதை விட ஆசிரியருடன் தான் அதிகம் செலவிடுகிறான். ஆதலால் மனிதனின் வாழ்வில் ஆசிரியர்களுக்கு எப்போதும் ஒரு முக்கிய இடம் உண்டு. மாதா, பிதா, குரு தெய்வம் என்பது சான்றோர் வாக்கு. teachers day Essay in Tamil.
ஒரு குழந்தை தனது தாய் தந்தையருக்கு அடுத்து நல்லொழுக்கம், பண்பாடு, அறிவு, மரியாதை, கல்வி என அனைத்தையும் ஆசிரியரிடமிருந்து தான் கற்றுக்கொள்கிறது. இத்தகைய சிறப்பு மிகுந்த ஆசிரியரை பெருமைப்படுத்துவதற்காகவே ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஆசிரியர் தினம் வரலாறு :
தன் வாழ்நாள் முழுவதும் ஒரு நல்லாசிரியராக வாழ்ந்து காட்டிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாளை தான் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்.
ஆசிரியர் தினம் பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் 1962-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆசிரியரின் சிறப்புகள் :
ஒரு குழந்தையை முதன் முதலில் இந்த பூமிக்கு கொண்டு வருபவள் தாய். இரண்டாவதாக அந்த குழந்தையை சான்றோன் ஆக்குபவர் தந்தை.
மூன்றாவதாக அந்த குழந்தையை தன் சொல்லாலும், எழுத்தாலும் ஒரு மனிதனாக உருவாக்குபவரே ஆசிரியர். எனவே தான் தெய்வத்திற்கு முன் மூன்றாமிடத்தில் ஆசிரியரை வைத்திருக்கின்றனர் நம் மூதாதையர் .
“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்”என ஆத்திச்சூடியில் பாடியிருக்கிறார் ஔவையார். ஆசிரியர் என்பவர் இறைவனுக்கு சமமாக பார்க்கப்படுபவர்.
மனித வரலாற்றில் பிரிக்க முடியாத மனித சமுதாயத்தின் அச்சாணியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். வாழ்க்கை என்ற பாடத்தை கற்பித்து மாணவர்களுக்கு ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள்.
ஒரு மாணவனை தன்னம்பிக்கை மிகுந்த மனிதன் ஆக்குவது ஆசிரியர்கள்தான். இப்படி மாணவர்களின் வாழ்வில் ஒரு பெரும் பங்கை வகிப்பதால் தான் ஆசிரியர்கள் என்றும் போற்றப்படுகிறார்கள்.
ஆசிரியர் தின கொண்டாட்டம் :
ஆசிரியர் தினமானது நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இதில் பல பேச்சுப் போட்டிகள், ஓவியப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் நடத்தி மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி மகிழ்வார்கள்.
மேலும் ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு தமிழக அரசின் “நல்லாசிரியர் விருது” வழங்கப்படுகிறது.
இப்படி மனித வாழ்வில் பெரும் பங்கு வகிக்கும் ஆசிரியர்களைப் போற்றி, நன்றி கூறவே ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு :
வீ.ராதாகிருஷ்ணன் என்றழைக்கப்படும் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் 1888-ஆம் ஆண்டு, செப்டம்பர் ஐந்தாம் நாள் திருத்தணியில் உள்ள சர்வபள்ளி என்னும் கிராமத்தில் வீராச்சாமிகும், சீதம்மாக்கும் மகனாக பிறந்தார். இவரது தாய் மொழி தெலுங்கு.
இவர் தன் இளமைக் காலத்தை திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்த இவர் கல்வியை, உதவித்தொகை மூலமாகவே தொடர்ந்தார்.
தனது தொடக்க கல்வியை திருவள்ளூரில் உள்ள ‘கௌடி’ பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை திருப்பதியிலுள்ள, ‘லூத்தரன் மிஷன்’ உயர்நிலை பள்ளியிலும், கல்லூரிக் கல்வியை வேலூரில் உள்ள ‘ஊரிஸ்’ கல்லூரியிலும் பயின்றார்.
பின் அங்கிருந்து சென்னையிலுள்ள கிறிஸ்துவர கல்லூரிக்கு மாறி இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். முதன்மைப் பாடமாக தத்துவத்தை தேர்ந்தெடுத்து படித்தார்.
குடும்ப வாழ்க்கை:
டாக்டர் ராதா கிருஷ்ணன் தனது 16-வது வயதில் தனது தூரத்து உறவினர் மகளான சிவகாமி என்னும் பெண்ணை மணமுடித்தார். இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தனர்.
இவரது ஒரே மகன் சர்வபள்ளி கோபால். இவர் இந்திய வரலாற்றுத் துறையில் மிக முக்கியமான ஒருவராக உள்ளார்.
இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத் கீதை, பிரம்மசூத்ரா மற்றும் சங்கரா ராமானுஜர்,மாதவர் போன்றோரின் வர்ணனைகளையும், சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி போன்றோர்களின் தத்துவங்களையும் கற்று தேர்ந்தார்.
மேலும் இவற்றையெல்லாம் நம் நாட்டிலும் அறிமுகப்படுத்தினார். இவற்றையெல்லாம் நம் நாட்டில் இருந்தே கற்றார் என்ற பெருமையும் இவரையே சாரும்.
பணிகள் மற்றும் பதவிகள்:
1962 முதல் 1967 வரை இந்திய குடியரசு தலைவராக பதவி வகித்தார். இவர் சுதந்திர இந்தியாவின் இரண்டாவது குடியரசு தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது
1933 முதல் 1937 வரை ஐந்து முறை தத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 1954-ஆம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த கட்டுரையை கீழ்கண்டவாறு இணையத்தில் தேடலாம் :
ஆசிரியர் தினம் சிறப்பு கட்டுரை, ஆசிரியர் தினம் கட்டுரை, naan virumbum asiriyar katturai in tamil, kanavu asiriyar katturai in tamil, aasiriyar essay in tamil, enakku piditha asiriyar tamil, teachers day speech tamil, teachers day best speech in tamil, aasiriyar patri katturai in tamil, aasiriyar patri, naan asiriyar aanal katturai, naan asiriyar aanal tamil katturai, if i am a teacher essay in tamil
Leave a Comment Cancel reply
Save my name, email, and website in this browser for the next time I comment.
- TN SCHOOL BOOK
- _1ST STANDARD
- _2ND STANDARD
- _3RD STANDARD
- _4TH STANDARD
- _5TH STANDARD
- _6TH STANDARD
- _7TH STANDARD
- _8TH STANDARD
- _9TH STANDARD
- _10TH STANDARD
- _11TH STANDARD
- _12TH STANDARD
- ESSAY & SPEECH
- SCHOOL WELFARE SCHEMES
TEACHERS DAY ESSAY IN TAMIL 2024: ஆசிரியர் தினக் கட்டுரை 2024
TEACHERS DAY ESSAY IN TAMIL 2024: இந்தியாவில் ஆசிரியர் தினம் என்பது சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் கல்வியாளர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பை கௌரவிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாள் மாணவர்கள் மற்றும் குடிமக்களின் இதயங்களில் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது.
தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஆசிரியர்கள் செய்யும் குறிப்பிடத்தக்க பணிகளுக்கு நன்றி, பாராட்டு மற்றும் மரியாதையை வெளிப்படுத்தும் தளமாக இது செயல்படுகிறது.
வரலாற்று சூழல்
TEACHERS DAY ESSAY IN TAMIL 2024: இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாக (1962-1967) பணியாற்றிய தொலைநோக்கு தத்துவஞானி, அறிஞர் மற்றும் அரசியல்வாதியான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளில் இருந்து செப்டம்பர் 5 ஆம் தேதியின் முக்கியத்துவம் உருவாகிறது.
TO KNOW MORE ABOUT - WEBTOON PROMO CODES
டாக்டர் ராதாகிருஷ்ணன் ஒரு சிறந்த கல்வியாளர் மட்டுமல்ல, அர்ப்பணிப்புள்ள ஆசிரியராகவும் இருந்தார். கல்வித் துறையில் அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகள், ஆசிரியர் தினத்தைக் கொண்டாடுவதன் மூலம் அவரது பாரம்பரியத்தை கௌரவிக்க நாடு தூண்டியது.
கொண்டாட்டங்கள் மற்றும் மரபுகள்
TEACHERS DAY ESSAY IN TAMIL 2024: இந்தியா முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தேசிய அளவில் ஆசிரியர் தினம் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
இந்த கொண்டாட்டங்களில் மாணவர்களின் பாராட்டு விழாக்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், உரைகள் மற்றும் விளக்கக்காட்சிகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் அடங்கும். சிந்தனைமிக்க சைகைகள், அட்டைகள் மற்றும் பரிசுகள் மூலம் மாணவர்கள் தங்கள் வழிகாட்டிகளுக்கு ஆழ்ந்த மரியாதை மற்றும் அன்பை வெளிப்படுத்தும் நாள்.
ஆசிரியர்களை கௌரவித்தல்
TEACHERS DAY ESSAY IN TAMIL 2024: ஆசிரியர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கௌரவிப்பதில் ஆசிரியர் தினத்தின் இதயம் உள்ளது.
இளம் மனங்களை வளர்ப்பதிலும், பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக்குவதிலும் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நாளில், ஆசிரியர்கள் அவர்களின் கல்விப் பங்களிப்புகளுக்காக மட்டுமல்ல, வகுப்பறைக்கு அப்பால் நீண்டிருக்கும் ஞானத்தையும் வாழ்க்கைப் பாடங்களையும் வழங்கும் வழிகாட்டிகள், வழிகாட்டிகள் மற்றும் முன்மாதிரியாக அவர்களின் பங்கிற்காகவும் பாராட்டப்படுகிறார்கள்.
சமூகத்தில் ஆசிரியர்களின் பங்கு
TEACHERS DAY ESSAY IN TAMIL 2024: எதிர்கால சந்ததியை வடிவமைப்பதில் ஆசிரியர்கள் சமூகத்தில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளனர். அவர்கள் மதிப்புகள், விமர்சன சிந்தனை மற்றும் அறிவுக்கான தாகத்தை வளர்க்கிறார்கள், எப்போதும் வளரும் உலகில் வெற்றிபெறுவதற்கான கருவிகளுடன் மாணவர்களை சித்தப்படுத்துகிறார்கள்.
ஆசிரியர்கள் கல்வி அறிவை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வாழ்க்கைத் திறன்களையும், பச்சாதாபத்தையும், சமூகப் பொறுப்பையும் கற்பிக்கின்றனர்.
அவர்களின் வழிகாட்டுதலின் மூலம், மாணவர்கள் சமூகத்திற்கு நேர்மறையாக பங்களிக்கத் தயாராக உள்ள நன்கு வட்டமான நபர்களாக உருவாகிறார்கள்.
ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
TEACHERS DAY ESSAY IN TAMIL 2024: ஆசிரியர் தினம் என்பது உன்னதமான தொழிலின் கொண்டாட்டமாக இருந்தாலும், கல்வியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை நினைவூட்டுகிறது.
இந்தியாவில், பெரிய வகுப்பு அளவுகள், வரையறுக்கப்பட்ட வளங்கள் மற்றும் சமூக எதிர்பார்ப்புகள் உள்ளிட்ட சவாலான சூழ்நிலைகளில் ஆசிரியர்கள் பெரும்பாலும் பணிபுரிகின்றனர்.
இந்தத் தடைகள் இருந்தபோதிலும், ஆசிரியர்கள் விடாமுயற்சியுடன், தங்கள் மாணவர்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான வலுவான அர்ப்பணிப்பைக் காட்டுகிறார்கள்.
முடிவுரை
TEACHERS DAY ESSAY IN TAMIL 2024: இந்தியாவில் ஆசிரியர் தினம் என்பது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் நபர்களுக்கு இதயப்பூர்வமான அஞ்சலி.
இது ஆசிரியர்கள் சமுதாயத்தில் ஏற்படுத்தும் அளவிட முடியாத தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது மற்றும் மனதை வளர்ப்பதிலும் வளர்ச்சியை வளர்ப்பதிலும் அவர்களின் அயராத முயற்சிகளை அங்கீகரிக்கிறது.
இந்த சிறப்பு தினத்தை நாம் கொண்டாடும் போது, ஒரு ஆசிரியரின் செல்வாக்கு ஒரு வகுப்பறையின் எல்லைக்கு அப்பால் நீண்டுள்ளது என்பதை நினைவில் கொள்வோம், மேலும் அவர்களின் பங்களிப்புகள் வாழ்க்கையை வளமாக்குகிறது மற்றும் பிரகாசமான நாளைய பாதையை வகுக்கின்றன.
TEACHERS DAY ESSAY IN TAMIL 2024 - ENGLISH
TEACHERS DAY ESSAY IN TAMIL 2024: Teacher's Day in India is a significant occasion that honors the invaluable contributions of educators to the society and the nation. Celebrated on September 5th every year, this day holds a special place in the hearts of students and citizens alike. It serves as a platform to express gratitude, admiration, and respect for the remarkable work that teachers do in shaping the future of the nation.
Historical Context
TEACHERS DAY ESSAY IN TAMIL 2024: The significance of September 5th stems from the birth anniversary of Dr. Sarvepalli Radhakrishnan, a visionary philosopher, scholar, and statesman who served as India's second President (1962-1967).
Dr. Radhakrishnan was not only an eminent academic but also a dedicated teacher. His remarkable contributions to the field of education inspired the country to honor his legacy by celebrating Teacher's Day.
Celebrations and Traditions
TEACHERS DAY ESSAY IN TAMIL 2024: Teacher's Day is celebrated with fervor across India, both in schools and educational institutions as well as at the national level.
The celebrations often include various activities such as felicitation ceremonies, cultural performances, speeches, and presentations by students to showcase their gratitude and appreciation towards their teachers.
It is a day when students express their deep respect and love for their mentors through thoughtful gestures, cards, and gifts.
Honoring Teachers
TEACHERS DAY ESSAY IN TAMIL 2024: The heart of Teacher's Day lies in honoring the selfless dedication, hard work, and unwavering commitment of teachers. They play a pivotal role in nurturing young minds and shaping them into responsible citizens.
On this day, teachers are not only appreciated for their academic contributions but also for their role as mentors, guides, and role models who impart wisdom and life lessons that extend far beyond the classroom.
Role of Teachers in Society
TEACHERS DAY ESSAY IN TAMIL 2024: Teachers hold a unique position in society as they mold the future generation. They instill values, critical thinking, and a thirst for knowledge, equipping students with the tools to succeed in an ever-evolving world.
Teachers not only impart academic knowledge but also teach life skills, empathy, and social responsibility. Through their guidance, students develop into well-rounded individuals ready to contribute positively to society.
Challenges Faced by Teachers
TEACHERS DAY ESSAY IN TAMIL 2024: While Teacher's Day is a celebration of the noble profession, it is also a reminder of the challenges educators face. In India, teachers often work in challenging conditions, including large class sizes, limited resources, and societal expectations.
Despite these obstacles, teachers persevere, displaying resilience and a strong commitment to their students' growth and development.
TEACHERS DAY ESSAY IN TAMIL 2024: Teacher's Day in India is a heartfelt tribute to the individuals who shape the nation's future. It highlights the immeasurable impact that teachers have on society and recognizes their tireless efforts in nurturing minds and fostering growth.
As we celebrate this special day, let us remember that the influence of a teacher extends far beyond the confines of a classroom, and their contributions continue to enrich lives and pave the way for a brighter tomorrow.
Post a Comment
தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி / how to get maximum marks in exam .
பள்ளி குழந்தைகளுக்கான தமிழக அரசு திட்டங்கள் / TAMILNADU GOVERNMENT SCHEMES FOR SCHOOL CHILDREN
Popular Posts
SAMACHEER KALVI 9TH BOOKS / சமச்சீர் கல்வி 9வது புத்தகம்
SAMACHEER KALVI 6TH BOOKS / சமச்சீர் கல்வி 6வது புத்தகம்
SAMACHEER KALVI 7TH BOOKS / சமச்சீர் கல்வி 7வது புத்தகம்
- BOOK BACK SOLUTIONS 10
- ESSAY & SPEECH 5
- EXAM TIPS 1
- SAMACHEER KALVI BOOKS 12
- SCHOOL WELFARE SCHEMES 20
- TNPSC NOTES 1
How To Download School Book PDF from Google Drive in our Website?
TNTEXTBOOK is the premier online site for anyone who are preparing Government Exams. TNTEXTBOOK was started in 17th July 2022 as a free Educational blog. We offers All Tamilnadu School Books to all School Students & Aspirants of TNPSC / Bank / Government exams.
Menu Footer Widget
ஆசிரியர் தின கட்டுரை – Teachers Day Essay For Kids
ஆசிரியர் தின கட்டுரை – Teachers Day Essay For Kids :- மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து கொண்டாடும் மிக முக்கிய விழா ஆசிரியர் தின விழா ஆகும்.இந்த விழா மாணவர்கள் ஆசிரியர்களை பாராட்ட மற்றும் நன்றி சொல்ல கொண்டாடும் விழா ஆகும்.இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி நடை பெறுகிறது.
முன்னாள் ஜனாதிபதி திரு சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்ததினம் செப்டம்பர் ஐந்து , அவர் தனது ஆசிரியர் தொழிலை திறம்பட செய்து குழந்தைகள் மீது அதீத பாசமும் கொண்டவராக இருந்ததாலும்.ஆசிரியராக பணியாற்றிய ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்ததினம் ஆசிரியர் தினமாக கொண்டாட படுகிறது.
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே இருக்கும் சிறு இடைவெளியை குறைக்க ,அவர்கள் இணைந்து ஒரு பண்டிகையை கொண்டாட வாய்ப்பாகவும் , ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களையும் நன்றியையும் பகிர்ந்து கொண்டு தங்கள் நட்புறவை வளர்த்துக்கொள்ள ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது இந்த ஆசிரியர் தினம்
ஆசிரியர்கள் தினம் பள்ளிகளில் மட்டுமல்லாது அனைத்து கல்லூரிகளிலும் , பல்கலைக்கழகங்களிலும் கொண்டாட படுகின்றன.இந்த தினத்தில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு பரிசு பொருட்கள் கொடுத்தும் , வாழ்த்து அட்டைகள் கொடுத்தும்,இணையம் மற்றும் தொலைபேசி வாயிலாக வாழ்த்து செய்தியை பகிர்ந்தும் கொண்டாட படுகிறது இந்த ஆசிரியர் தினம்
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
தீபாவளி கட்டுரை - Diwali Essay for Kids - Deepavali Essay for Children
அசோகர் கட்டுரை - ashoka the great essay for kids, related articles, துரித உணவுகள் நன்மை தீமைகள் – fast food advantages and disadvantages, 5g நன்மை தீமைகள் – 5g pros and cons, முயற்சி திருவினையாக்கும் கட்டுரை-essay on efforts, எனக்கு பிடித்த உணவு கட்டுரை-my favorite food essay in tamil-தோசை கட்டுரை.
- எனக்கு பிடித்த உணவு கட்டுரை-My Favorite Food Essay in Tamil-தோசை கட்டுரை July 4, 2023
- Photogallery
- Why We Celebrate Teachers Day On September 5
ஆசிரியர்கள் தினம் - இதன் சிறப்புகள் என்ன? ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா?
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி, ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர்களைக் கொண்டாடி மகிழும், இந்த தினத்தின் சிறப்புகள் குறித்து சுருக்கமாக பார்க்கலாம்..
உங்களுக்கானவை
அடுத்த செய்தி
Teachers Day: ஆசிரியர் தினம் இந்தியாவிற்கு மட்டுமா..? இதன் வரலாற்று, முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
Teachers Day 2022: கல்வி பணிகளில் சிறந்து விளங்கிய ஆசிரியர்களின் சிறப்பான பங்களிப்பை நினைவு கூறும், நாளாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
Teachers Day
சுதந்திர இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவரும், சிறந்த தத்துவஞானியுமான டாக்டர் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் 1962 முதல், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதே நாளில் உலகளவில் பொதுவாக அக்டோபர் 5 ஆம் தேதியும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
teachers day
ஆசிரியர் தினத்தை ஏன் கொண்டாட வேண்டும்..? மாதா, பிதா வரிசையில் மூன்றாவது இடம்பெற்றுள்ள ஆசிரியர்கள், நமக்கு ஒழுக்கம், தன்னம்பிக்கை, பொது அறிவு என பல்வேறு விஷயங்களைக் கற்பித்து, உண்மையான வழிகாட்டியாக திகழ்கின்றனர். ஆம், சுய நலம் பாராமல் மற்றவர்களின் குழந்தைகள் முன்னேற உழைப்பவர்களாக இருக்கிறார்கள் ஆசிரியர்கள். ஊதியம் வாங்கி வேலை பார்க்கிறோம் என்ற உணவை தாண்டி, பல தியாகங்களை செய்து அர்ப்பணிப்புடன் தங்கள் மாணவர்களின் உயர்வுக்கு காரணமாகவும் அமைகிறார்கள் இன்றும் பல ஆசிரியர்கள்.
அதன் வரலாற்று முக்கியத்துவம்:
கல்வி தொடர்பாக மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களின் தியாகத்தை கவுரவிக்கும் வகையில், கடந்த 1994ம் ஆண்டு உலக ஆசிரியர் தினம் அக்டோபர் 5ம் தேதி அனுசரிக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) அறிவித்தது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இருப்பினும், சீனாவில் செப்டம்பர் 10, மலேசியாவில் மே 16, ஸ்பெயினில் நவம்பர் 27ம் தேதி மற்றும் ஈராக்கில் மார்ச் 1ம் தேதி என வெவ்வேறு தேதிகளில் ஆசியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
மேலும் படிக்க..ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாட காரணம் என்ன? விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு!!
அக்டோபர் 5ம் தேதி கொண்டாட என்ன காரணம்..?
அக்டோபர் 5ம் தேதி சர்வதேச ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதற்கு காரணம் என்னவென்றால், 1966ம் ஆண்டில், ஒரு சிறப்பு அரசாங்கங்களுக்கிடையேயான மாநாட்டின் போது ஆசிரியர்களின் நிலை குறித்த யுனெஸ்கோ பரிந்துரையை அம்மாநாட்டில் ஏற்று கொள்ளப்பட்டதே ஆகும்.
மேலும் படிக்க..ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாட காரணம் என்ன? விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு!!
ஆசிரியர் தினத்தன்று, குறிப்பாக இந்தியா முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆசிரியர்களாக அலங்கரித்து, அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்படும் வகுப்புகளில் சொற்பொழிவுகளை மேற்கொள்கின்றனர். அதுமட்டுமின்று, சிறந்த ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக, மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி வருகின்றன.
மேலும் படிக்க..Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய துல்லிய கணிப்பு ...இந்த ராசிகளுக்கு பொருளாதாரம் மேம்படும்...
RELATED STORIES
Aval Burfi : ருசியான அவல் பர்பி... இப்படி ஒருமுறை ட்ரை பண்ணி தான் பாருங்களேன்!!
Lust Horoscope : யாருக்கெல்லாம் செக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கும் தெரியுமா? ஜோதிடர்கள் சொன்ன சீக்ரெட்..
கோடையில் சருமத்தை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகாவும் வைக்க 'இத' மட்டும் செஞ்சா போதும்!
Pregnancy Summer Diet : கோடை காலத்தில் கர்ப்பிணிகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்.. என்னென்ன தெரியுமா..?
டீ, காபியுடன் 'இந்த' மருந்துகளை சாப்பிடாதீங்க..! மீறினால் ஆபத்து..!!
Top Stories
Loksabha Elections 2024 தேர்தல் பிரசாரம்: தமிழகம் வரும் ராகுல் காந்தி!
Suriya : அரசியல்வாதி போல் வந்து... கொடுமுடி கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் சூர்யா - போட்டோஸ் இதோ
தமிழ்நாடு அரசின் காலை உணவுத்திட்டம்: கனிமொழி பெருமிதம்!
2 மணிநேரத்தில் 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!
Recent Videos
Vijay Sethupathi : தகுதியானவர்களுக்கு ஓட்டு போடுங்க... கைகூப்பி வேண்டுகோள் விடுத்த விஜய் சேதுபதி - வீடியோ இதோ
Papanasam : பாபநாசம் அருகே உள்ள அருள்மிகு வடபத்திர காளியம்மன் ஆலயம் - கோலாகலமாக நடந்த திருநடன திருவிழா!
Jothimani : "தேர்தல் பத்திரம் மூலம் வந்த பணம்.. மோடி முதல் செந்தில் பாலாஜி வரை செல்கிறது" - பகீர் கிளப்பிய MP!
Kanimozhi : "மோடி தமிழ் கற்க நாங்களே நல்ல ஆசிரியரை அனுப்புறோம்" - தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி!
Soodhu Kavvum 2 : சிவா காமெடியில் மிரட்டும் சூது கவ்வும் 2 - அந்தோணி தாசன் குரலில் வெளியான First Single!
Speech on Teachers
ஆசிரியர்கள் பற்றிய பேச்சு தமிழில் | Speech on Teachers In Tamil - 1800 வார்த்தைகளில்
ஒரு குழந்தையின் வாழ்க்கையில் ஆசிரியரின் பங்கு முக்கியமானது. குழந்தைகளின் நிகழ்காலமும் எதிர்காலமும் அவர்களின் கைகளில் இருப்பதால் ஆசிரியராக இருப்பது ஒரு பெரிய பொறுப்பாகும். ஒரு குழந்தை ஆரம்பத்திலிருந்தே எடுக்கும் அனைத்து பாடங்களின் விளைவாக குழந்தைகள் என்னவாக மாறுகிறார்கள். இந்தக் கட்டுரை ஒரு தனிநபரின் வாழ்க்கையில் ஆசிரியர்கள் வகிக்கும் பகுதியைப் புரிந்துகொள்ளவும், ஆசிரியர்களைப் பற்றிய பேச்சுகளுக்கு எடுத்துக்காட்டுகளை வழங்கவும் உதவும்.
ஒரு ஆசிரியரின் பங்கு
குழந்தைகளின் மனம் அவர்களின் ஆசிரியர்களால் உலகிற்கு திறக்கப்படுகிறது. அறிவை வழங்குவதோடு, வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது என்ன என்பதை அவர்கள் காட்டுகிறார்கள். கவனித்துக்கொள்ள பல மாணவர்கள் உள்ளனர், அவர்கள் அனைவரும் ஆசிரியருக்கு ஒரே மாதிரியாகத் தோன்றுகிறார்கள்; இருப்பினும், ஒரே ஆசிரியர் ஒவ்வொரு மாணவரையும் வித்தியாசமாக முறையிடுகிறார்.
ஒவ்வொரு நபரும் அவர்களால் என்றென்றும் மாறுகிறார்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் அவர்களின் தாக்கம்.
ஒரு ஆசிரியர் தனது மாணவர்களிடம் ஏற்படுத்தும் செல்வாக்கு மிகப்பெரியது. எதுவாக இருந்தாலும், ஒரு மாணவர் எப்போதும் உதவி மற்றும் வழிகாட்டுதலுக்காக ஆசிரியரையே எதிர்பார்க்கிறார். ஆசிரியர்கள் இரண்டாவது பெற்றோரைப் போன்றவர்கள், மேலும் குழந்தை 4 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளை வடிவமைப்பதில் ஆசிரியர்களுக்கு நியாயமான பங்கு உண்டு. எனவே, குழந்தைகளுக்கு அறிவுப்பூர்வமாகவும், உணர்ச்சி ரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும் நல்ல ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.
ஆசிரியர்கள் பற்றிய சிறு பேச்சு
You might also like:.
- Speech On Adult Education
- Adult Education Speech
- Adult Education Speech | Speech On Adult Education for Students and Children in English
ஒரு நல்ல ஆசிரியர் ஒரு மெழுகுவர்த்தியைப் போன்றவர் - முஸ்தபா கெமால் அட்டதுர்க்கின் கூற்றுப்படி, மற்றவர்களை ஒளிரச் செய்ய அது தன்னை நுகர்கிறது. ஆசிரியத் தொழில் எப்போதும் உன்னதமானதாகக் கருதப்படுகிறது. எந்த ஒரு நல்ல ஆசிரியரும் தன் வெற்றியையும் முயற்சியையும் தேடுவதில்லை. அவன்/அவள் எப்போதும் அவனது/அவள் மாணவர்களின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை மனதில் வைத்திருப்பார். ஆசிரியர்கள் ஆசிரியர்களாக தேர்வு செய்யும் போது பல குணங்களை உள்ளடக்கியதாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு ஆசிரியர் ஒரு வழிகாட்டியாகவும், வழிகாட்டியாகவும், நண்பராகவும், அன்பு மற்றும் அக்கறையின் தன்னலமற்ற உறைவிடமாகவும் பார்க்கப்படுகிறார். ஒரு ஆசிரியர் எவ்வளவு சிறியவராக இருந்தாலும் சரி, எவ்வளவு வயதானவராக இருந்தாலும் சரி, அவர் தனது மாணவர்களை தனது சொந்த குழந்தைகளாகவே கருதுகிறார். ஆசிரியரின் செல்வாக்கு வகுப்பறைக்கு அப்பால் நீண்டுள்ளது. அலெக்ஸாண்ட்ரா கே ட்ரென்ஃபோரின் கூற்றுப்படி, சிறந்த ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு எங்கு பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள், ஆனால் என்ன பார்க்க வேண்டும் என்று அவர்களிடம் சொல்ல வேண்டாம். குழந்தைகள் தங்கள் இலக்கை இழக்காதபடி, இருண்ட சாலைகளிலும் கூட ஆசிரியர்கள் தங்கள் ஒளியை பிரகாசிக்கச் செய்கிறார்கள். நீங்கள் ஒரு ஆசிரியராக இருக்க வேண்டிய அனைத்தும். உலகிற்கு, நீங்கள் மற்றொரு ஆசிரியராக இருக்கலாம், ஆனால் எங்களுக்கு, நீங்கள் எங்கள் ஹீரோ. இத்தனை வருடங்களாக நீங்கள் எங்களுக்காக என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதற்காக நாங்கள் உங்களை மதிக்கிறோம். நாங்கள் சிறந்த மாணவர்கள் அல்ல என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் நாங்கள் கேட்கக்கூடிய சிறந்த ஆசிரியர் நீங்கள்தான். நாங்கள் யார் என்பதற்காக எங்களை ஏற்றுக்கொண்டதற்கும் எங்களை நேசித்ததற்கும் நன்றி.
ஆசிரியர்களின் முக்கியத்துவம் பற்றிய உரை
ஒவ்வொரு மாணவரின் வாழ்க்கையிலும் ஒரு ஆசிரியர் மிக முக்கிய பங்கு வகிக்கிறார். ஆசிரியர்கள் பரிபூரணமாக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் அவர்கள் அறிவுடையவர்களாக இருக்க வேண்டும், எனவே அவர்கள் தங்கள் மாணவர்களுக்கு சிறந்த தகவலை வழங்க முடியும் மற்றும் அவர்கள் தங்கள் மாணவர்களைப் புரிந்துகொள்ள முடியும். ஆசிரியர்கள் பெரும்பாலும் உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கிறார்கள். ஆசிரியர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் குழந்தைகள் உள்ளனர். ஒரு நல்ல ஆசிரியர் ஒரு பொக்கிஷத்தைப் போன்றவர், அது போற்றி மதிக்கப்பட வேண்டும்.
ஜாய்ஸ் மேயர், 'சரியான சுண்ணாம்பு மற்றும் சவால்களின் கலவையால் ஆசிரியர்கள் வாழ்க்கையை மாற்ற முடியும்' என்றார். ஆசிரியர்களாகிய அவர்கள் எப்பொழுதும் சரியான பாதையில் சென்று சவால்களை சமாளிப்பார்கள் என்பது உண்மைதான். ஆசிரியர்கள் வழிகாட்டுவதை விட அதிகம் செய்ய முடியும். அவர்கள் வழி வகுத்து, எதிர்காலத்தில் தங்களைப் பற்றிய சிறந்த பதிப்பாக குழந்தைகளை தங்கள் சொந்த பாதைகளைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறார்கள்.
ஆசிரியர்கள் மீது அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- An Emergency Situation – an Open Speech
- Animal Abuse Speech | Animal Cruelty and Prevention to Cruelty Speech
- Anniversary Speech for the Company
நம் வாழ்வில் ஆசிரியர்கள் ஏன் முக்கியமானவர்கள்?
ஆசிரியர்கள் அறிவைப் புகட்டுகிறார்கள், சரியான திசையில் நம்மை வழிநடத்துகிறார்கள். நம் வாழ்க்கையை சிறப்பாக்க தன்னலமின்றி உழைக்கும் அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள் இல்லாமல் நம் வாழ்க்கை நிச்சயமாக ஒரே மாதிரியாக இருக்காது.
பேச்சை எப்படி முடிப்பது?
உங்கள் உரையை முடிக்க, உங்களுக்கு பல விருப்பங்கள் உள்ளன. சுருக்கி முடிக்கவும், பேச்சின் முழு யோசனையையும் சுருக்கமாகக் கூறும் மேற்கோளைப் பயன்படுத்தவும், கேட்கும் அனைவரையும் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த உங்களுடன் சேர ஊக்குவிக்கவும்.
ஒரு ஆசிரியருக்கு சிறந்த பேச்சு எது?
உங்கள் ஆசிரியரைப் பற்றி பேசும்படி கேட்கப்படும்போது என்ன சொல்ல வேண்டும் என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால், உங்களுக்காக என்னிடம் ஒரு உதவிக்குறிப்பு உள்ளது. உங்கள் ஆசிரியர்கள் உங்களுக்காகச் செய்த அனைத்திற்கும் நன்றி மற்றும் அவர்களைப் பற்றிய உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
- Anniversary Speech for The Company in English
- APJ Abdul Kalam Speech
- Best Farewell Speech for School Students
- Best Man Speech
ஆசிரியர்கள் பற்றிய பேச்சு தமிழில் | Speech on Teachers In Tamil
- , September 5, 2023
Useful Tamil Words For Teacher’s Day: Your #1 Best Guide!
As the summer sun bids adieu, India gears up for a day close to every student’s heart – Teachers’ Day! But here’s the scoop: ever wondered how it’s celebrated in Tamil schools? In this blog, we’ll dive into the colorful world of Tamil culture and uncover the Tamil words for Teacher’s Day, adding a delightful twist to your celebration.
So, get ready for a linguistic adventure that’ll spice up your Teachers’ Day festivities and deepen your admiration for those wonderful educators. Let’s make this year’s celebration unforgettable with those compliments !
The Significance Of Teacher’s Day In India
Teacher’s Day in Tamil Nadu, India, also known as “ஆசிரியர் தினம்” (Aasiriyar Dinam), is observed on September 5th, coinciding with the birth anniversary of Dr. Sarvepalli Radhakrishnan, a renowned philosopher, and India’s second President. This day serves as a reminder of the invaluable contributions made by teachers to society.
It is also a vibrant celebration and an opportunity to honor the remarkable educators, “கல்வியாளர்கள்” (kalviyāḷarkaḷ), who mold our destinies. It’s a moment when students pour their hearts out in gratitude, acknowledging the extraordinary impact teachers have on their lives. This day transcends mere academics; it’s a beautiful testament to the profound connection between teachers and students, recognizing them as not just instructors but as inspirational mentors. It’s a day filled with rituals, prayers, and offerings, revealing the enduring reverence for knowledge and wisdom in Tamil culture .
Tamil Words For Teacher’s Day
Thinking of words to describe your teacher or mentor? Worry no more! Below are some words that can be used to compliment those who became a key to experiencing a quality education.
Inspiring – Ūkkamaḷikkum (ஊக்கமளிக்கும்)
Do you look up and find your teacher influential on what you want to become as a person? The word “inspiring” resonates as a tribute to the remarkable educators who ignite a lifelong passion for learning in their students. It encapsulates the profound impact teachers have on shaping young lives and fostering a brighter future.
Dedicated – Arppaṇikkappaṭṭatu (அர்ப்பணிக்கப்பட்டது)
In the cultural celebration of Teacher’s Day in Tamil, the term “dedicated” shines as a symbol of the unwavering commitment that educators display day in and day out, nurturing the minds of their students. It embodies their selfless devotion to imparting knowledge, shaping character, and fostering a lifelong love of learning.
Supportive – Ātaravaḷikkum (ஆதரவளிக்கும்)
Got a teacher who cheers for you during your ups and downs? The word “supportive” reflects the profound encouragement and guidance that teachers provide, empowering their students to overcome challenges and reach for the stars.
Patient – Nōyāḷi (நோயாளி)
Remember the time when your teacher did not get mad easily despite being stubborn sometimes? The term “patient” embodies the virtue that educators exemplify, as they calmly guide their students through the maze of knowledge, nurturing understanding at each step.
Caring – Akkaṟai (அக்கறை)
The word “caring” resonates as a tribute to educators who go beyond the curriculum, providing unwavering support and nurturing the well-being of their students like a guardian.
Excellent Guidance – Ciṟanta Vaḻikāṭṭutal (சிறந்த வழிகாட்டுதல்)
The word “excellent guidance” shines as a beacon, acknowledging the transformative impact of educators who skillfully navigate their students towards knowledge and wisdom. It symbolizes the invaluable mentorship that leads to academic excellence and personal growth, instilling a lifelong reverence for learning.
Other Words Related To Teacher’s Day
Discovering the words tied to Teacher’s Day is like uncovering a hidden treasure chest of appreciation and expanding your vocabulary even more! Through this, you are about to join a fantastic tradition that honors the amazing mentors who’ve shaped us.
Phrases To Show Honor & Gratitude
Teacher’s Day is like a big thank-you party for our awesome educators! These phrases? Think of it as our way of saying, “You rock!” So, let’s get our thank-you cards ready and celebrate the wisdom-packed superheroes we call teachers!
How To Make Teacher’s Day Extra Special?
To make your Teacher’s Day truly unforgettable, remember that genuine appreciation and thoughtfulness are key. Here are some engaging tips:
- Handwritten Thank-You Notes: Send your teachers sincere notes of appreciation for their efforts and commitment. Personalized cards can be a heartfelt and thoughtful gift.
- Thoughtful Gifts: Think about showing thanks by offering meaningful presents. These might contain stationery, literature on their subject, or even a little plant for their workstation.
- Classroom Decorations: Work with your fellow students to decorate the classroom with banners, streamers, and balloons to show your gratitude. The tone of the day can be created by a festive atmosphere.
- Student Performances: Plan student performances for your teachers, such as songs, dances, or skits, to make them laugh and feel appreciated. It’s a fun way to express your gratitude and make them smile.
- Social Media Shoutouts: Post words, images, or videos expressing your gratitude and highlighting the celebration on social media platforms. To spread the love, make sure to utilize a special hashtag.
Boost Your Skills In Tamil Language With Ling!
Did this post help you express your heartfelt gratitude in Tamil on Teacher’s Day? Did you have a blast diving into the vibrant world of the Tamil language ? Are you eager to enhance the quality of your learning experience? Then look no further!
With Ling, you will be amazed at how it can make each word in a foreign language easy to learn. Trust us, it’s not as intimidating as it sounds! With its innovative features, interactive lessons, and user-friendly interface, Ling will empower you to speak Tamil and other languages with confidence.
You can download it from the App Store or Google Play Store , and it’s designed to make your journey to mastering Tamil a breeze!
Leave a Reply Cancel reply
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.
People also read
Nepal National Holidays: 10+ Important Occasions
10+ Fun Nepali Words For The Circus
10 Flavors In Nepali: Delicious & Finger-licking Good!
Nepali Date And Time: #1 Best Guide About The Nepali Calendar
9+ Relationships In Nepali: Interesting Twists And Angles
All About Nepali Food Ingredients: #1 Best Guide
What makes learning with ling special, interactive exercises.
Improve your pronunciation by starting a conversation with our app’s interactive chatbot
Engaging activities
Practice your skills with mini-games and track your progress with fun quizzes
Mix of languages
Choose from over 60 languages, both big and small, and listen to audio from native speakers
Proven results
Backed by linguistic research, our learning methods can help you achieve fluency in record time
Southeast Asia
East europe.
© 2024 Simya Solutions Ltd.
Essay on Teachers Day for Students and Children
500+ words essay on teachers day.
A Teacher is someone who acts as a guide and inspiration to people – both young and old. He/she is charged with the responsibility of creating awareness as well as opening the mind of people by instilling values, morals, and ethics. Teachers efforts are recognized during the teacher’s day. They shape minds, and we annually celebrate their contribution to the development of society in the form of Teachers’ day across the world. However, We celebrate The International Teachers Day on October 5 th annually.
Teachers’ Day in India
Teachers are respected and honored for their important contribution in shaping individuals. 5 th of September is annually celebrated as Teachers’ day in India. This is actually the birthday of the former President of India, Dr. Sarvepalli Radhakrishnan .
Why Teachers’ Day?
The contributions and efforts made by teachers never go unnoticed. This led to the inauguration of the Teacher’s day which seeks to celebrate the efforts made by the teachers. In India, we celebrate the teacher’s day on the birthday of Dr. Sarvepalli Radhakrishnan who was known as a man of many great qualities and attributes.
Teachers play many roles in overall development such as:
- They guide children and students to leadership skills
- They instill discipline into young people molding them into future
- Also, they provide their students with spiritual and emotional guidance.
Teachers also come across numerous challenges in their day to day activities such as the unappreciative culture by the community as well as dealing with disciplinary issues of their students.
Get the huge list of more than 500 Essay Topics and Ideas
What can we do on Teachers’ Day?
A thank-you can go a long way. In our busy lives, we have come to forget expressing gratitude. Many studies have come up explaining the benefits that gratitude can have on the one who expresses it and on the one who receives it. We can take this opportunity as a day to thank our teachers and express our love and care for them.
- We can suggest and provide assistance by making use of the skills that we have learned over these years.
- Also, we can give them a visit on this day and share with them our experiences. This will for sure make them happy and proud of their efforts.
- We can present a small token of appreciation, something that they could keep as a memory like a pen or a planner or something that would be useful for them.
- We should also seek their blessings and let them know that we are always there for them when they need us.
- Students can collectively gift them books and other materials and organize a get-together especially if the class has graduated.
Time spent with them and gratitude expressed would be a great gesture to make teachers happy and proud. It is very important to recognize their contribution to molding our personality.
Teachers play an important role in the development of any country . This is why it is vital to set aside a day when the teachers are given the recognition they deserve. We celebrate Teachers’ day to honor the contribution of Teachers in our lives. Duties undertaken by teachers in the upbringing of children is immense and thus being recognized with teachers’ day is a step towards recognizing the profession and the role they play in society.
Customize your course in 30 seconds
Which class are you in.
- Travelling Essay
- Picnic Essay
- Our Country Essay
- My Parents Essay
- Essay on Favourite Personality
- Essay on Memorable Day of My Life
- Essay on Knowledge is Power
- Essay on Gurpurab
- Essay on My Favourite Season
- Essay on Types of Sports
Leave a Reply Cancel reply
Your email address will not be published. Required fields are marked *
Download the App
- Our Services
- Additional Services
- Free Essays
Finished Papers
Customer Reviews
IMAGES
VIDEO
COMMENTS
thank you for the essay. after searching of two days i got the essay in this website thank you for the good essay in tamil. i dont know to type in tamil so …. ← Previous Post Next Post → Categories
Teachers Day ஆசிரியர் தினம் ... சிறு கட்டுரை - "நேர்மை தவறாத சிறுவன் " Tamil Short Essay Honesty. 20/02/2024.
TEACHERS DAY ESSAY IN TAMIL 2023: புகழ்பெற்ற தத்துவஞானி, அறிஞரும், இந்தியாவின் ...
Teachers Day Speech In Tamil | Teachers Day Katturai In Tamil: ஆசிரியர் தினம் என்பது நமது ...
Teachers' Day Essay ஆசிரியர் தினம் பற்றிய கட்டுரை கற்பித்தல்-கற்றல் ...
ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை | Aasiriyar Thinam Katturai in Tamil | teachers day speech in tamil Advertisement ...
Categories சாதனை மனிதர்கள் Tags aasiriyar essay in tamil, aasiriyar patri, aasiriyar patri katturai in tamil, bharathiar in tamil, enakku piditha asiriyar tamil, if i am a teacher essay in tamil, kanavu asiriyar katturai in tamil, naan asiriyar aanal tamil katturai, naan virumbum asiriyar katturai in tamil, teachers ...
TEACHERS DAY ESSAY IN TAMIL 2024 - ENGLISH TEACHERS DAY ESSAY IN TAMIL 2024: Teacher's Day in India is a significant occasion that honors the invaluable contributions of educators to the society and the nation. Celebrated on September 5th every year, this day holds a special place in the hearts of students and citizens alike.
வருசம் புல்லா திட்றது.. Teachers day வந்தா மட்டும் நீங்கதான் என் தெய்வம்னு உருட்டுறது
ஆசிரியர் தின கட்டுரை - Teachers Day Essay For Kids dtradangfx Send an email June 19, 2023. 94 1 minute read. Facebook Twitter LinkedIn Tumblr Pinterest Reddit VKontakte Odnoklassniki Pocket. ... My Hobby Essay in Tamil; December 23, 2021
Teachers Day Speech in Tamil ஆசிரியர் தின உரை தமிழில். Last updated on Aug 24, 2023. Download as PDF. Teachers have touched our hearts in countless ways, often becoming the unsung heroes of our personal stories. As Teachers' Day approaches, many of us feel the urge to express our gratitude.
Trending : IPL 2024 Lok sabha elections 2024 March 2024 bank holidays Tamil Web stories Krodhi Tamil New Year 2024 Horoscope Virudhunagar News Foods to avoid in summer Health news tamil Topics : Holi Diabetes Panguni Uthiram Krodhi Tamil New Year Facepack Guru Peyarchi 2024 108 divya desams
Teachers Day 2022: கல்வி பணிகளில் சிறந்து விளங்கிய ஆசிரியர்களின் ...
#ஆசிரியர்தினம்சிறப்புகட்டுரை #teachersdayessayintamil #asiriyardhinamkatturai#teachersday#teachersdayessay# ...
TEACHERS DAY 2023 ESSAY IN TAMIL: ஆசிரியர் தினம் 2023 கட்டுரை: Teachers' Day, observed annually on the 5th of September, is a significant occasion that recognizes and appreciates the vital role educators play in shaping the future of society. This special day offers us the opportunity to reflect on the ...
Essay on Teacher அறிமுகம் ஒரு ஆசிரியராகக் கருதப்படும் ஒருவர், அறிவு ...
here article tell about teachers day special quotes Story first published: Friday, September 1, 2017, 18:46 [IST] Other articles published on Sep 1, 2017 Colleges Exams --Or-- Select a Field of Study Select a Course Submit. Select UPSC ...
நம் வாழ்வில் ஆசிரியர்கள் ஏன் முக்கியமானவர்கள்? ஆசிரியர்கள் ...
10 lines Essay on Teacher's Day in Tamil, ஆசிரியர் தினத்தன்று தமிழில் 10 வரிகள், Essay on Teachers Day in Tamil, Teachers Day, 5 ...
Teacher's Day in Tamil Nadu, India, also known as "ஆசிரியர் தினம்" (Aasiriyar Dinam), is observed on September 5th, coinciding with the birth anniversary of Dr. Sarvepalli Radhakrishnan, a renowned philosopher, and India's second President.
500+ Words Essay on Teachers Day. A Teacher is someone who acts as a guide and inspiration to people - both young and old. He/she is charged with the responsibility of creating awareness as well as opening the mind of people by instilling values, morals, and ethics. Teachers efforts are recognized during the teacher's day.
ஆசிரியர் தின கவிதைகள் 2023 | Teachers Day Quotes in Tamil Images தவறுகளை திருத்த தண்டனை கொடுத்து திறமையை ஊக்குவிக்க பரிசுகள் கொடுத்து
249.00 USD. Level: College, High School, University, Master's, Undergraduate, PHD. Hire a Writer. User ID: 102732. Receive a neat original paper by the deadline needed. Login to your PenMyPaper account. Essay writing help has this amazing ability to save a student's evening. For example, instead of sitting at home or in a college library the ...